search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது மருத்துவம்"

    • ஆவிபிடித்தல் உங்களை ரிலாக்ஸாக இருக்கச் செய்யும்.
    • மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் மூச்சு திணறல் ஏறப்டுகிறது.

    ஆவிபிடித்தல்

    ஆவிபிடித்தல் இதை நீங்கள் அடிக்கடி செய்யாமல் மூக்கு அடைப்பிருந்தால் அல்லது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யலாம். இது உங்களை ரிலாக்ஸாக இருக்க செய்யும். ஆவி பிடிக்கும்போது சிலியாவிற்கு அந்த வெப்பமான காற்று மூக்கை சுத்தம் செய்து, அடைப்பு இருந்தாலும் அதை எடுக்கவும் உதவி செய்கிறது.

    உங்களுக்கு தொற்றுநோய் இருக்கும்போதும் மூக்கடைப்பு இருக்கும்போது செய்தாலே போதுமானது, அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. தொற்று இருக்கும் போது மூக்கடைப்பு இருக்கும் போது மட்டும் செய்ய வேண்டும்.

     இருமல்

    தொற்றுநோய் இருக்கும்போது ஏன் இருமல் வருகிறது?

    நமது தொண்டை நுரையீரல் மற்றும் நுரையீரலில் இருக்கும் அல்வியோலிகளில் ஏற்படும் தொற்றுநோய்களை வெளியேற்ற நமது உடலே முயல்கிறது. இதை தான் இருமல் என்று சொல்கிறோம். ஆனால் இருமலை அடக்கி கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு அடக்கமுடியாமல் இருமுகிற போது அதன் பலன்கள் அதிகமாக இருக்கும்.

    இருமலை எப்படி கட்டுப்படுத்துவது?

    தோல்களை ரிலாக்சாக வைத்து சேரில் அமர்ந்து, கால்கள் இரண்டும் தரையில் வைத்து கைகளை வயிற்று தசைகளில் இறுக்கமாக வைத்துக்கொள்ளவும். கையில் ஏதாவது சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து வாயை மூடிக்கொண்டு இருமலாம். இது கட்டுப்படுத்தப்பட்ட இருமல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இருமுகிற போது காற்று செல்லும் வழியை சுத்தம் செய்ய உதவுகிறது.

     போஸ்டுரல் டிரைனேஜ்

    போஸ்டுரல் என்றால் நிற்பது அல்லது படுப்பது. உடலில் ஏதாவது தொற்றுநோய், ஆஸ்துமா, சி.பி.ஓ.டி போன்றவைகளால் நுரையீரல் பாதித்தால் மூச்சுக்குழாய்கள் சுருங்கிவிடும்.

    இந்த தொற்றுகளை எதிர்க்க நுரையீரல் சளியை உருவாக்குகிறது. இது மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் சுருங்கி மூச்சு திணறல் ஏறப்டுகிறது. அதேபோல நாம் இரும்புகிறபோது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.

    படுக்கும் நிலையில் வைத்து போஸ்டுரல் வடிகால் நம்மை எளிமையாக சுவாசிக்க உதவி செய்கிறது. இதை உண்பதற்கு முன்பு செய்வது நல்லது, இல்லையென்றால் உணவிற்கு பின் செரிமானமாகிய 2 மணி நேரத்திற்கு பின் செய்யலாம். கீழே அல்லது மெத்தையில் படுக்கலாம்.

    அசெளகரியமாக இருந்தால் தலையணையை சப்போட்டாக வைத்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பி படுக்கலாம். தலையணை வைக்கும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் வயிற்றுப்பகுதியில் படுக்க வேண்டும். அதாவது கவிழ்ந்து படுத்து உங்கள் மார்பு பகுதி கீழேயும் இடுப்பு பகுதி அதே நிலையில் கவிழ்ந்த நிலையில் மேலேயும் இருக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் சளியை வெளியேற்ற உதவுகிறது.

    உடற்பயிற்சி

    மருத்துவர்கள் அனைவருமே நம்மை 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். ஏனென்றால் உடல் உழைப்பு செய்கிறபோது நுரையீரலின் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடல் நிறைய ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் – டை- ஆக்ஸைடு வெளியேற்றி ரத்த ஓட்டம் சீராவதால் உடலில் உள்ள அதிக அளவிலான கார்பன் – டை- ஆக்ஸைடு எளிதாக வெளியேறுகிறது.

     க்ரீன் டீ

    இதில் நிறைய ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்கள் உள்ளது. ஆன்டி- ஆக்ஸிடண்ட்களில் அதிக அழற்சி எதிர்ப்பு திறன்கள் உள்ளது. ஒரு தொற்று ஏற்படுகிறது என்றால் அதை எதிர்க்க எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது க்ரீன் டீ-யில் உள்ளது. ஒருநாளுக்கு ஒருமுறை அல்லது இருமுறை குடித்தால் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.

    உணவுமுறை

    மஞ்சள், வால்நட், செர்ரிகள் ப்ளூபெர்ரி, பச்சை காய்கறிகள் இவை அனைத்திலுமே எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்களும் உள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

     சுவாசிக்கும் முறை

    இது மிகவும் முக்கியமான டிப்ஸ் ஆகும். இதை ஐந்து-பத்து நிமிடம் வரை தினமும் செய்ய வேண்டும். இது எப்போதுமே 1:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் நேரம் 1, மூச்சு வெளியேற்றும் நேரத்தை 2 ஆக வைக்கவும். உதாரணத்துக்கு மூச்சை உள்ளிழுப்பதற்கு 2 வினாடி எடுக்கிறீர்கள் என்றால் மூச்சை வெளியேற்றுவதை 4 வினாடிகளுக்கு பொறுமையாக விட வேண்டும்.

    • நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.
    • வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது நல்லது.

    மனிதனுக்கு அடிப்படையான ஆதாரம், உணவு. சித்த மருத்துவ முறைப்படி வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று கூறுகளும், அதேமாதிரி ஏழு உடல் கூறுகளும் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். உணவு தான் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பதோடு மலம், சிறுநீர் மற்றும் வியர்வை போன்ற கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இந்த செயல்பாட்டில் எப்பொழுதும் சமநிலை இருந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சமநிலை மாறு பட்டால் உடல்நிலை நோய்களை உருவாக்க ஆரம்பித்து விடும். எனவே நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.

    உணவு நன்றாக செரிமானம் அடைய வேண்டும் என்றால் வயிற்றில் பாதி பகுதியை காலியாக விட்டு விட வேண்டும். அதேபோல் வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவு சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லது. இது அஜீரணத்தை குறைக்கிறது.

    பழங்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மீன், இறைச்சி போன்றவை நமது உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மணி சம்பா போன்ற அரிசி வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும், ஜீரக சம்பா மற்றும் குந்திரமணி சம்பா வாத நோய்களுக்கும் நல்லது. அரிசி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கூழ்கள் மிகவும் நல்லது.

    சோயா, காலிஃபிளவர், பட்டாணி பருப்புகள், கிரீன் டீ போன்றவை மூட்டு அழற்சியை போக்குகிறது. இதயம், செரிமான அமைப்பு, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது நல்லது.

    பாலில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு கீல்வாதத்தில் காணப்படும் மூட்டுகளில் வீக்கம் மற்றும் சேதத்தை தடுக்கிறது. இதில் காணப்படும் லினோலெனிக் அமிலம் அழற்சியை தடுக்கிறது. இரவில் பால், மோர் குடிப்பது வெப்ப உணர்வு, ரத்த சோகை, வயிற்று வலி போன்றவற்றை நீக்குகிறது. நெய்யை சேர்த்துக் கொள்வதும் நல்லது.

    ரத்த சோகை, பலவீனமாக இருத்தல், மனநல கோளாறுகள் போன்றவற்றுக்கு ஆட்டு இறைச்சி நல்லது. மனநல கோளாறுகள் மற்றும் காசநோய்க்கு முயல் இறைச்சியும் பரிந்துரைக்கப்படுகிறது. கோழி முட்டை வாதம் மற்றும் கபம் நோய்களுக்கு நல்லது.

    ஏலக்காய் வெப்பத்தை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்கிறது. சீரக விதைகள் பசி ஏற்படுத்தும் தன்மையை அதிகரிக்கிறது. இஞ்சி கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்திற்கு நல்லது. மேலும் கருப்பை புற்றுநோயை தடுக்கிறது. பூண்டு கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பெருங்காயம் குடற் புழுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது.

    வெந்தயம் பித்தத்தை குறைக்கிறது. மிளகு கபம் நோய்களை போக்குகிறது. காது கோளாறுகள், கல்லீரல் நோய்கள், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களை சரி செய்கிறது.

    தவிர்க்க வேண்டியவை

    டால்டா, வனஸ்பதி போன்ற எண்ணெய் வித்துக்கள் தவிர்க்க வேண்டும். பலாப் பழம் ஆசைக்கு எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு மீறி உண்ண வேண்டாம்.

    செம்மறி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியையும் தவிர்க்க வேண்டும். கோழியின் தோல் பகுதி வாத நோய்களை ஏற்படுத்துகிறது மற்றும் மூல நோயை அதிகரிக்க செய்கிறது. எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

    • 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள்.
    • காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் பில்லியன் ஆர்ட்ஸ் பீட்டிங் பவுண்டேஷன் இணைந்து பொது மருத்துவ முகாம் நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடைபெற்றது

    திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான எழிலரசன் தலைமை வகித்தார். நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன், அப்போலோ மருத்துவமனை குழுமம் சார்பில் மூத்த அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காப்பக திட்ட மேலாளர் விஜயா அனைவரையும் வரவேற்று பேசினார் .மூத்த டாக்டர் வர்கீஸ், உதவி பேராசிரியர் டாக்டர் சருண், தசை இயக்க டாக்டர் கருணாநிதி மற்றும் செவிலியர்கள் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், சுகர் நிலை, உடல் இயக்கங்கள், கை நடுக்கம், ரத்த சோகை, தலைவலி, போன்ற பல்வகை வியாதிகளுக்கு உண்டான பரிசோதனைகள் செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்கள் .

    காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் டாக்டர்களிடம் நன்றாக சாப்பிடுகின்றோம் சந்தோஷமாக இருக்கிறோம். என்று சொன்னதை கேட்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இவர்களை சந்தோஷமாக மகிழ்விக்க பணியாளர்கள் அனைவருக்கும் உதவி பேராசிரியர் டாக்டர் சருண் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார்.

    காப்பக பணியாளர்கள் சரவணன், கோகிலா, சக்தி பிரியா, வள்ளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆனந்த் பாபு நன்றி கூறினார்.

    ×